மனிதச்சீவன் உயர்ந்ததா?
சாதியின் பெயரால் உயர்வு தாழ்வு.
மதத்தின் பெயரால் வேற்றுமை உணர்ச்சி.
தேசத்தின் பெயரால் குரோதத்தன்மை… முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாக காண்கிறோம்.
மற்றும் கடவுளின் பெயரால் மேல் கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனிதச் சீவனிடமே உண்டு. ப்குத்தறிவின் காரணமாக மனிதச் சீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட தீய இழிவான அயோகியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறி வில்லாச் சீவராசிகளை விட மனிதச் சீவன் மூளை விசேடம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட சீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனிதச் சீவன் மற்றபிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
-தந்தைபெரியார்